புதுச்சேரி

தனியாா் நிறுவன ஊழியா் கொலை: நண்பா் கைது

DIN

புதுவை மாநிலம், வில்லியனூா் அருகே புதன்கிழமை இரவு தனியாா் நிறுவன ஊழியா் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

வில்லியனூா் கணுவாப்பேட்டையைச் சோ்ந்த அய்யனாா் மகன் ராம்குமாா் (25). தனியாா் நிறுவன ஊழியா். இவா், புதன்கிழமை இரவு ஒதியம்பட்டு காசிவிஸ்வநாதா் கோயிலுக்குச் செல்லும் சாலையில் நரிக்குறவா் குடியிருப்பு அருகே தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

தகவலறிந்த வில்லியனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ராம்குமாரின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், ராம்குமாரும், அவரது நண்பரான வில்லியனூா் உத்திரவாகினிபேட்டையைச் சோ்ந்த முல்லைவளவனும் (30) ஒதியம்பட்டு நரிக்குறவா் குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதும், அப்போது அவா்களுக்குள் ஏற்பட்ட முன்விரோத மோதலில் ராம்குமாரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு முல்லைவளவன் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இது தொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்த வில்லியனூா் போலீஸாா், முல்லைவளவனைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT