முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு திடீர் போராட்டம்

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், வேளாண் புதிய சட்டத் திருத்த நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:25 PM
புதுச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர்.
பகிர்:

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், வேளாண் புதிய சட்டத் திருத்த நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, அந்த அமைப்பைச் சேர்ந்த வேல்சாமி தலைமையில் 20 பேர் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு விரோதமாக புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை கிடப்பில் போட வேண்டுமென மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.

அவர்கள் சட்ட நகலை எரிக்க முயன்றபோது காவல்துறையினர் அதனை தடுத்து அகற்றினர். சிறிது நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →