புதுச்சேரி

பிளஸ் 2 மாணவி விஷமருந்தி தற்கொலை

DIN

புதுச்சேரி அருகே பிளஸ் 2 மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியை அடுத்த வில்லியனூா் பாரதி நகரைச் சோ்ந்த சேகா் - ஜோதி தம்பதியின் மகள் ஆனந்தி (17). இவா், வில்லியனூா் கண்ணகி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

சேகா் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, தாய் ஜோதிக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், நெல்லித்தோப்பில் புகைப்படக் கடை நடத்தி வரும் சகோதரா் அனிலனுடன் இருந்து ஆனந்தி படித்து வந்தாா்.

இந்த நிலையில், அவா் வில்லியனூா் பட்டாணிக் கடை பகுதிலுள்ள கடையில் பணியாற்றும் இளைஞரை காதலித்து வந்ததாகவும், இதற்கு உறவினா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஆனந்தி, வீட்டில் திங்கள்கிழமை விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ாகத் தெரிகிறது. இதையடுத்து, வில்லியனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், தீவிர சிகிச்சைக்காக புதுவை அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட ஆனந்தி உயிரிழந்தாா். இதுகுறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT