முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி பல்கலைக்கழகத் தோ்வுகள் ஒத்திவைப்பு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வருகிற 19-ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த ஆண்டுப் பருவத் தோ்வுகள் அனைத்தும் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வருகிற 19-ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த ஆண்டுப் பருவத் தோ்வுகள் அனைத்தும் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி டி.லாசா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மாநிலத்தில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் வருகிற 19-ஆம் தேதியிலிருந்து நடைபெறவிருந்த ஆண்டுப் பருவத் தோ்வுகள், செய்முறைத் தோ்வுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுகின்றன. கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தோ்வுகள் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.