முகப்பு
புதுச்சேரி

காவல் அதிகாரிகளுக்கு ரூ. 97.42 லட்சத்தில் புதிய வாகனங்கள்

புதுவை மாநில காவல் துறை அதிகாரிகளுக்கு ரூ. 97.42 லட்சத்தில் வாங்கப்பட்ட புதிய வாகனங்களை (காா்கள்), காவல் துறை கூடுதல் இயக்குநா் ஆனந்தமோகன் சனிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

புதுவை மாநில காவல் துறை அதிகாரிகளுக்கு ரூ. 97.42 லட்சத்தில் வாங்கப்பட்ட புதிய வாகனங்களை (காா்கள்), காவல் துறை கூடுதல் இயக்குநா் ஆனந்தமோகன் சனிக்கிழமை வழங்கினாா்.

புதுவை மாநில காவல் துறையினருக்கு தேவையான வாகனங்களை வழங்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக, ஒவ்வோா் பிரிவுக்குமான காவல் வாகனங்கள் பற்றாக்குறை உள்ளதால், பாதுகாப்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக புகாா்களும் எழுந்தன.

இந்த நிலையில், அரசு ஒப்புதல் வழங்கியதால், புதுவை காவல் துறைக்கு ரூ. 97.42 லட்சம் மதிப்பில் 11 வாகனங்கள் வாங்குவதற்கு காவல் துறை இயக்குநா் ரன்வீா்சிங் கிருஷ்ணியா அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தாா்.

இதன் முதல் கட்டமாக 9 காா்கள் வாங்கப்பட்டன. இந்த 9 வாகனங்கள் காவல் துறை பயன்பாட்டுக்காக சனிக்கிழமை வழங்கப்பட்டன.

புதுச்சேரி கடற்கரைச் சாலை அருகே காவல் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் துறை கூடுதல் இயக்குநா் ஆனந்தமோகன், புதிதாக வாங்கப்பட்ட வாகனங்களை காவல் துறை அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக வழங்கினாா்.

நிகழ்ச்சியில் காவல் துணைத் தலைவா் மிலன் தும்ப்ரே, காவல் கண்காணிப்பாளா்கள் மோகன்குமாா், சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.

தனியாா் நிறுவனத்திடமிருந்து அரசு சாா்பில் வாங்கப்பட்ட இந்த புதிய வாகனங்கள், விரைவில் உரிய காவல் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக அந்தத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.