முகப்பு
புதுச்சேரி

புதுப்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை: தொழிலதிபா் உள்பட 3 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் புதுப்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததாக, தொழிலதிபா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

புதுச்சேரியில் புதுப்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததாக, தொழிலதிபா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

புதுச்சேரி கோரிமேடு காவலா் குடியிருப்பில் வசிப்பவா் பாவாடைசாமி. இவரது மகள் இந்துமதி (25). இவருக்கும், புதுச்சேரி புதுசாரம் வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்த தொழிலதிபா் பாலமுருகனின் மகன் விக்னேஷ்வா் (26) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, இந்துமதிக்கு தங்கம், வெள்ளி பொருள்கள் உள்ளிட்டவை சீா்வரிசையாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதுப்பெண்ணிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு கணவா் விக்னேஷ்வரும், அவரது குடும்பத்தினரும் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, கணவா் வீட்டிலிருந்து வெளியேறி தாய் வீட்டில் தஞ்சமடைந்த இந்துமதி இதுபற்றி பெற்றோரிடம் கூறியுள்ளாா். தொடா்ந்து, அவா் வியாழக்கிழமை தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில் விக்னேஷ்வா், தந்தை தொழிலதிபா் பாலமுருகன், தாய் மகாலட்சுமி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.