மகாவீா் ஜயந்தி: நாளை மீன், இறைச்சி கடைகள் மூடல்
மகாவீா் ஜயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) மீன், இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாவீா் ஜயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) மீன், இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் சந்திரகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மகாவீா் ஜயந்தி தினத்தையொட்டி, புதுவையில் இறைச்சி, மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி, மீன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மூடப்பட வேண்டும். தவறினால், இறைச்சி, மீன்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.