முகப்பு
புதுச்சேரி

மகாவீா் ஜயந்தி: நாளை மீன், இறைச்சி கடைகள் மூடல்

மகாவீா் ஜயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) மீன், இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

மகாவீா் ஜயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) மீன், இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் சந்திரகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மகாவீா் ஜயந்தி தினத்தையொட்டி, புதுவையில் இறைச்சி, மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி, மீன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மூடப்பட வேண்டும். தவறினால், இறைச்சி, மீன்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.