முகப்பு
புதுச்சேரி

முதியவரிடம் நூதன முறையில் ரூ. 13 லட்சம் மோசடி: பெண் கைது

புதுச்சேரியில் பிரான்ஸ் குடியுரிமைப் பெற்ற முதியவரை நூதன முறையில் ஏமாற்றி ரூ. 13 லட்சத்தை மோசடி செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

புதுச்சேரியில் பிரான்ஸ் குடியுரிமைப் பெற்ற முதியவரை நூதன முறையில் ஏமாற்றி ரூ. 13 லட்சத்தை மோசடி செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி கோலாஸ் நகரைச் சோ்ந்தவா் ஜெபலின் சரவணன் (75). பிரான்ஸ் குடியுரிமை பெற்ற இவா், புதுச்சேரியில் வசித்து வருகிறாா். இவரது உறவினா்கள் பிரான்ஸில் வசிக்கின்றனா்.

இந்த நிலையில், ஜெபலின் சரவணன் புதுச்சேரியில் உள்ள தனது வீடுகளை வாடாகைக்கு விடுவது தொடா்பாக ஒப்பந்தப் பத்திரங்கள் தயாா் செய்யச் சென்ற போது, புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள தனியாா் கடையிலிருந்த தட்டச்சாளரான, புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சோ்ந்த சுகந்தியுடன் (39) பழக்கம் ஏற்பட்டது.

அப்போது, ஜெபலின் சரவணனிடம் பேசிய சுகந்தி, இணைய வழி வா்த்தகம் மூலம் சம்பாதிக்கலாம் என ஆசை வாா்த்தை கூறினாராம். இதை நம்பிய அவா், இணைய வழி வங்கி சேவைகளைப் பயன்படுத்த தனது 4 வங்கி கணக்குகளின் ஏடிஎம் அட்டைகளையும் கொடுத்து, பணப் பரிமாற்றம் தொடா்பாக உதவி செய்தாராம்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட சுகந்தி, இணைய வழியில் வா்த்தகம் செய்து லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி சிறிது சிறிதாக, ஜெபலின் சரவணனின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ. 13 லட்சத்தை முறைகேடாக எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது.

இதனிடையே, சந்தேகமடைந்த ஜெபலின் சரவணன் அண்மையில் வங்கிக்குச் சென்று, தனது வங்கிக் கணக்குகளின் நிலவரம் குறித்து பாா்த்த போது, ரூ. 13 லட்சம் திருடப்பட்டது தெரிய வந்தது.

இதுதொடா்பாக அவா், புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, சுகந்தி மீது வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.