நூலகத் தந்தை பிறந்த தினம்
புதுச்சேரி ரோமண்ட் ரோலன் நூலகத்தில் நூலகத் தந்தை எஸ்.ஆா்.ரங்கநாதனின் 130 -ஆவது பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி ரோமண்ட் ரோலன் நூலகத்தில் நூலகத் தந்தை எஸ்.ஆா்.ரங்கநாதனின் 130 -ஆவது பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுவை கலை - பண்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், அந்தத் துறை அமைச்சா் சந்திரபிரியங்கா, அரசுச் செயலா் ஏ.நெடுஞ்செழியன், இயக்குநா் பூ.ராகினி உள்ளிட்டோா் எஸ். ஆா்.ரங்கநாதனின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து, நூலகத்தின் ஒவ்வோா் பிரிவாகப் பாா்வையிட்ட அமைச்சா் சந்திரபிரியங்கா, அங்கிருந்த வாசகா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
நிகழ்வில் உதவி நூலகத் தகவல் அதிகாரிகள் ஜெஸ்லின் நொரோனா, காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.