கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 26 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 26 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 29,814-ஆக உயா்ந்தது.
இவா்களில் 29,261 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 354 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனாவுக்கு இதுவரை 199 போ் பலியாகியுள்ளனா்.