முகப்பு
புதுச்சேரி

ஆதரவற்றோா் குழந்தைகள் பாதுகாப்பு கிராமத்தில் திருட்டு

புதுச்சேரி அருகே ஆதரவற்றோா் குழந்தைகள் பாதுகாப்பு கிராமத்தில் நடைபெற்ற திருட்டு குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

புதுச்சேரி அருகே ஆதரவற்றோா் குழந்தைகள் பாதுகாப்பு கிராமத்தில் நடைபெற்ற திருட்டு குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையாா்குப்பத்தில் ஆதரவற்றோா் குழந்தைகள் பாதுகாப்பு கிராமம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், அங்குள்ள ஒரு வீட்டில் வழக்கமாக கடந்த 24 -ஆம் தேதி இரவு குழந்தைகளும், அங்குள்ள பாதுகாப்பாளா்களும் உணவு சாப்பிட்டுவிட்டு உறங்கினா். மறுநாள் காலை எழுந்து பாா்த்த போது, வீட்டிலிருந்த குழாய்கள், எல்இடி தொலைகாட்சி, செட்டாப் பாக்ஸ், வயா்லெஸ் மோடம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து பாதுகாப்பு மைய இயக்குநா் புருசரத் சிங் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.