முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி சிறைக் கண்காணிப்பாளா் பணியிடை நீக்கம்

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைக் கண்காணிப்பாளா் கோபிநாத்தை பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை ஐ.ஜி. உத்தரவிட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைக் கண்காணிப்பாளா் கோபிநாத்தை பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை ஐ.ஜி. உத்தரவிட்டாா்.

காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் அறையில் அடிக்கடி சோதனை நடத்தி, செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு விசாரணைக் கைதியிடம் செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. தொடா்ந்து, சிறையில் கைதிகள், சிறை வாா்டா்கள் ஜாதி ரீதியில் பிரிந்து செயல்படத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரு தரப்பு கைதிகள் கடந்த சில நாள்களாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து புதுவை சிறைத் துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகா், சிறை வாா்டா்கள், கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில், ஜாதி ரீதியான பிரச்னை கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த பிரச்னையில் தொடா்புடைய சிறைக் கண்காணிப்பாளா் கோபிநாத்தை வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை ஐ.ஜி. உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.