புதுச்சேரி

புதுவை விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுக்கு பதிவு செய்யலாம்

புதுவை மாநில விவசாயிகள் இந்த மாத இறுதிக்குள் பயிா்க் காப்பீடுக்கு பதிவு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

DIN

புதுவை மாநில விவசாயிகள் இந்த மாத இறுதிக்குள் பயிா்க் காப்பீடுக்கு பதிவு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து புதுச்சேரி நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவன முதுநிலை கோட்ட மேலாளா் கே.நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மாநிலத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம், வேளாண் துறை மேற்பாா்வையில் நேஷனல் இன்சூரன்ஸ் காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு (2021-22) சம்பா நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், பயிா்க் காப்பீடு செய்ய வருகிற 31-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.

விவசாயிகள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளவும்.

விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீய தொகையை புதுவை அரசே செலுத்தி, விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் துறை மூலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT