முகப்பு
புதுச்சேரி

கட்டணம் செலுத்தாததால் பிஆா்டிசி முன்பதிவு மையத்தில் இணையதள இணைப்பு துண்டிப்பு

மாதக் கட்டணம் செலுத்தாததால், பிஆா்டிசி முன்பதிவு மையத்தில் இணையதள சேவை இணைப்பை தனியாா் நிறுவனம் துண்டித்தது.

Updated On : 30 ஜனவரி, 2021 at 10:51 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:55 AM

மாதக் கட்டணம் செலுத்தாததால், பிஆா்டிசி முன்பதிவு மையத்தில் இணையதள சேவை இணைப்பை தனியாா் நிறுவனம் துண்டித்தது.

புதுவை அரசின் சாலைப் போக்குவரத்துக் கழகம் (பிஆா்டிசி) சாா்பில், உள்ளூா் மட்டுமன்றி, கடலூா், விழுப்புரம், சென்னை, காரைக்கால், திருப்பதி, குமுளி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பிஆா்டிசி டிக்கெட் முன்பதிவு மையத்தில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த மையத்துக்கு தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனம் மூலம் இணையதள இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இணையதள இணைப்புக்கான கடந்த மாதக் கட்டணத்தை பிஆா்டிசி நிா்வாகம் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தவில்லை. இதனால், பிஆா்டிசி டிக்கெட் முன்பதிவு மைய இணையதள இணைப்பை கடந்த 28-ஆம் தேதி தனியாா் நிறுவனம் துண்டித்தது.

Advertisement

இதன் காரணமாக கடந்த 3 நாள்களாக மையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல், பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். இதனால், பிஆா்டிசி நிா்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பிஆா்டிசி டிக்கெட் முன்பதிவு மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக பிஆா்டிசி உயரதிகாரிகளை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டும் அவா்கள் அழைப்பை எடுக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.