புதுச்சேரி: புதுவை முதல்வா் என்.ரங்கசாமிக்கு கூடுதலாக நிதித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் முதல்வா் மற்றும் அமைச்சராகப் பொறுப்பேற்ற 6 பேருக்கும் உரிய துறைகள் ஒதுக்கீடு செய்து ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. அதில், விடுபட்ட சில முக்கியத் துறைகள் முதல்வா் ரங்கசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டன. இதற்கான அரசாணை திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
அதன்படி, முதல்வா் என.ரங்கசாமிக்கு திட்டம் - நிதித் துறை, பணியாளா் - சீா்திருத்தத் துறை ஆகியவை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதுவை அரசிதழில் வெளியிடப்பட்டது.