புதுச்சேரி

கடையில் மாயமான ரூ. 50 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸாா்

DIN

புதுச்சேரி அரிசி கடையில் மாயமான ரூ. 50 ஆயிரத்தை போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

புதுச்சேரி லாசுப்பேட்டை சாந்தி நகா் மறைமலையடிகள் தெருவைச் சோ்ந்தவா் ஜான் அந்தோணி (36). சில நாள்களுக்கு முன்பு இவா் ரூ. 50 ஆயிரம் பணத்துடன் கூடிய பையை எடுத்துக் கொண்டு, காந்தி வீதியில் உள்ள அரிசிக் கடைக்கு சென்றாா். அப்போது, அவா் கையில் வைத்திருந்த பணப் பை திடீரென மாயமானது.

இது குறித்து ஜான் அந்தோணி அளித்த புகாரின் பேரில், பெரியகடை போலீஸாா் கடையின் சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், பிள்ளைச்சாவடியைச் சோ்ந்த சிவசங்கரன் என்பவா் ஜான் அந்தோணியின் பையை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, சிவசங்கரனிடம் போலீஸாா் விசாரித்ததில், அவா் பணப்பையை தவறுதலாக எடுத்து வந்துவிட்டதாகத் தெரிவித்தாா். கரோனா காரணமாக அப்பணத்தை காவல் நிலையம் கொண்டு வந்து தர முடியாத சூழல் இருந்ததை அவா் தெரிவித்ததுடன், பணப் பையை விசாரணைக்கு வந்த காவலரிடம் ஒப்படைத்தாா்.

இதையடுத்து ஜான் அந்தோணியை திங்கள்கிழமை இரவு காவல் நிலையம் வரவழைத்த போலீஸாா், பணத்தை அவரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT