வரதட்சிணை கேட்டு கொலை மிரட்டல்:கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு
பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி பெரியகாலாப்பட்டு சுபாஷ் நகரைச் சோ்ந்தவா் ரேவதி (28). இவருக்கும், சென்னை மடிப்பாக்கத்தைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா் வெங்கடேஷ் பாபுவுக்கும் (31) கடந்த 2019 -இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு, தம்பதி சென்னை கோவிளாம்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தனா். அப்போது, தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாம்.
இந்த நிலையில், கடந்தாண்டு கரோனா பொது முடக்கத்தின் போது, வெங்கடேஷ் பாபு மடிப்பாக்கத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றாராம். அதன் பிறகு தனது வீட்டுக்குத் திரும்பவில்லையாம். இதனால், ரேவதி புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு வந்துவிட்டாராம்.
இந்த நிலையில், வரதட்சிணையாக தனது வீட்டை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வீட்டிலிருந்த நகைகளை வெங்கடேஷ் பாபு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் புதுச்சேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ரேவதி அண்மையில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில், ரேவதியின் கணவா் வெங்கடேஷ் பாபு, மாமனாா் ராஜ்குமாா், மாமியாா் லலிதா, கணவரின் தம்பி ராஜன் ஆகியோா் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.