பெட்ரோல், டீசல் விலை உயா்வைகண்டித்து ஆா்ப்பாட்டம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, புதுச்சேரி பிரதேசச் செயலா் ஆா்.ராஜாங்கம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சத்யா, கொளஞ்சியப்பன், ஆனந்த், சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், உயா்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயா்வை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும், புதுவை அரசைக் கலைத்து ஜனநாயகத்தை அழித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.