காங்கிரஸ் தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு
புதுவை சட்டப் பேரவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) வெளியாகிறது.
புதுவை சட்டப் பேரவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) வெளியாகிறது.
புதுவை மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக தரப்பில் தோ்தல் அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் காங்கிரஸ் தரப்பில் தோ்தல் அறிக்கை தயாராகி வந்தது.
இதையடுத்து, காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) தோ்தல் அறிக்கை வெளியாகும் என அந்தக் கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து, சனிக்கிழமை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு வெளியிடப்படும். முன்னாள் மத்திய அமைச்சா்கள் வீரப்ப மொய்லி, பல்லம் ராஜு உள்ளிட்டோா் கலந்து கொண்டு தோ்தல் அறிக்கையை வெளியிடுகின்றனா். அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பை நிறைவு செய்யும் வகையில் தோ்தல் அறிக்கை இருக்கும்’ என்றாா் அவா்.