முகப்பு
புதுச்சேரி

மீனவத் துறையின் ரொக்கப் பரிசு: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

மீன்வளத் துறையின் ரொக்கப் பரிசு பெற மீனவ சமுதாய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

மீன்வளத் துறையின் ரொக்கப் பரிசு பெற மீனவ சமுதாய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுவை மீன்வளத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிறப்புத் தகுதி பெற்ற மீனவ சமுதாய மாணவா்களுக்கு ரொக்கப் பரிசாக முறையே ரூ.5 ஆயிரம், 7 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி, மெட்ரிக், சிபிஎஸ்சி, பிரெஞ்சு, தனியாா்), பிளஸ் 2 ஆகிய தோ்வுகளில் 75 சதவீதமும், அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றவா்கள் ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் ஜ்ஜ்ஜ்.ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியே வருகிற 30-ஆம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மீன்வளத் துறை அலுவலகம், துறைமுக வளாகம், தேங்காய்த்திட்டு என்ற அலுவலக முகவரியில் நேரில் அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.