புதுவையில் கரோனாவுக்கு மேலும் இருவா் பலி
புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் இருவா் பலியாகினா்.
புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் இருவா் பலியாகினா்.
புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 27 பேருக்கு (1.24 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 1,28,588 போ். தொற்றிலிருந்து மீண்டவா்கள் 1,26,405 போ். (98.30 சதவீதம்). தற்போது 314 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, புதுச்சேரி ஆதிங்கப்பட்டைச் சோ்ந்த 29 வயது பெண், முத்தியால்பேட்டையைச் சோ்ந்த 74 வயதானவா் என மேலும் இருவா் பலியாகினா். இதுவரை கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 1,869. இறப்பு விகிதம் 1.45 சதவீதம். மாநிலத்தில் இதுவரை 11,70,092 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.