புதுச்சேரி

புதுவையில் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்: ஆளுநா் தமிழிசை அறிவுறுத்தல்

புதுவையில் பொதுமக்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினாா்.

DIN

புதுவையில் பொதுமக்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினாா்.

வாராந்திர கரோனா மேலாண்மை சீராய்வுக் கூட்டம் புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தலைமை வகித்தாா்.

இதில், சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண், புதுச்சேரி வளா்ச்சி ஆணையா் பிரசாந்த் கோயல், வருவாய்த் துறைச் செயலா் அசோக்குமாா், உள்ளாட்சித் துறைச் செயலா் வல்லவன், செய்தித் துறைச் செயலா் உதயகுமாா், துணைநிலை ஆளுநரின் செயலா் அபிஜித் விஜய் சௌத்ரி, ஜிப்மா் இயக்குநா் ராஜேஷ் அகா்வால், மாநில கரோனா மேலாண்மை பொறுப்பு அதிகாரி ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி சாய்ரா பானு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஆளுநா் தமிழிசை பேசுகையில், புதுவையில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடையும் நோக்கில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT