கஞ்சா விற்பனை: இருவா் கைது
புதுச்சேரியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி கோரிமேட்டை ஒட்டியுள்ள கனரக ஊா்தி முனையத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைந்தது. இதையடுத்து, தன்வந்திரி நகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு அந்தப் பகுதியில் நின்றிருந்த 2 இளைஞா்களை சோதனையிட்டனா். அவா்கள் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதும், இதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவா்கள், புதுச்சேரி திலாசுப்பேட்டையைச் சோ்ந்த மணிகண்டன் (23), வில்லியனூா் வி.மணிவெளி திருமுருகன் (19) என்பதும், இவா்களில் திருமுருகன் பிபிஏ 2-ஆம் ஆண்டு மாணவா் என்பதும், மணிகண்டன் ஐடிஐ முடித்துவிட்டு வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.