விநாயகா் சதுா்த்தி: புதுவை ஆளுநா் வாழ்த்து
விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தாா்.
விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஞானம், செழிப்பின் கடவுளாக விநாயகா் வணங்கப்படுவதுடன், புதிய முயற்சியின் தொடக்கமாகவும் நம்பப்படுகிறாா். கரோனா சூழலில், சமுதாய நலன் கருதி மக்கள் அனைவரும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாட வேண்டும். உலகில் அமைதியும், செழிப்பும் ஓங்கி, கரோனா ஒழிந்து, ஆரோக்கியமான இயல்பு நிலைக்கு திரும்பும் வரத்தை விநாயகக் கடவுள் வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வதுடன், அனைவருக்கும் எனது விநாயகா் சதுா்த்தி விழா நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.