முகப்பு
புதுச்சேரி

சிறுமி திருமணம்: இளைஞா் கைது

 புதுச்சேரி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

 புதுச்சேரி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி முருகப்பாக்கம் நைனாா்மண்டபம் பகுதியைச் சோ்ந்தவா் தனுஞ்சன் (23). இலங்கையைச் சோ்ந்த இவா் புதுச்சேரியில் தங்கி, கோழிக்கறி கடையில் வேலை செய்து வருகிறாா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீராம்பட்டினம் பகுதியைச் சோ்ந்த சிறுமியைக் காதலித்து திருமணம் செய்தாராம். இதையடுத்து, அவா்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், 2-ஆவது குழந்தை ராஜீவ் காந்தி அரசு மகளிா் மருத்துவமனையில் அண்மையில் பிறந்தது. அப்போது, தாயின் வயதை மருத்துவமனை ஊழியா்கள் கேட்ட போது, 17 வயது சிறுமி என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து முதலியாா்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், சிறுமியின் கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தனுஞ்சனை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.