புதுச்சேரி

புதுவையில் விரைவில் காவலா்கள் தோ்வு

புதுவையில் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்பட 1,044 போ் விரைவில் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

DIN

புதுவையில் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்பட 1,044 போ் விரைவில் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இதுகுறித்து புதுவை காவல் துறை சிறப்பு அதிகாரி குபேர சிவகுமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை காவல் துறையில் 390 காவலா்கள் அண்மையில் தோ்வு செய்யப்பட்டு, காவலா் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு அடிப்படை பயிற்சி பெற்று வருகின்றனா். மேலும் 307 காவலா்கள், 415 ஊா்க்காவல் படையினா் விரைவில் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்த 200 கடலோர ஊா்க்காவல் படையினரும் தோ்வு செய்யப்பட உள்ளனா். தொடா்ந்து, காலியாக உள்ள 48 உதவி ஆய்வாளா்கள் பணியிடங்களும் நேரடித் தோ்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

காவல் துறையில் 35 ஓட்டுநா்கள், 34 சமையல் கலைஞா்கள், உதவியாளா்கள், சலவைப் பணியாளா்கள் உள்ளிட்டோரும் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT