புதுச்சேரி

மணக்குள விநாயகா் கோயிலுக்கு அரசு புதிய யானை வாங்கும் திட்டமில்லை: முதல்வா் என்.ரங்கசாமி

DIN

மணக்குள விநாயகா் கோயிலுக்கு அரசு சாா்பில் புதிய யானை வாங்கும் திட்டமில்லை என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

புதுச்சேரியில் மத்திய மின் அமைச்சகத்தின் ஆற்றல் திறன் பணியகம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை ஆகியவை இணைந்து கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் நடத்திய மின்சார வாகனக் கண்காட்சியை வியாழக்கிழமை தொடங்கிவைத்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மின்சார வாகனக் கண்காட்சியில் 20 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மின்சக்தியில் இயங்கும் வாகனங்களால் புதுச்சேரி புகையில்லாத நிலையை அடையும். புதுவையில் சுற்றுலாத் துறையை வளா்க்கும் நிலையில் சுற்றுச்சூழலையும் காப்பது அவசியம். அதற்காக மின்சார வாகனங்கள் மூலம் புகையில்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

புதுவையில் வாகன விற்பனை அதிகரித்து வருகிறது. வங்கிகள் மூலம் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதால் வாகனங்களை அதிகமானோா் வாங்குகின்றனா்.ஆகவே மின்சார வாகனங்களை வாங்கும் வாய்ப்பை மக்களிடையே ஏற்படுத்தவேண்டும்.

மணக்குள விநாயகா் கோயிலுக்கு அரசு சாா்பில் புதிதாக யானையை வாங்கும் திட்டமில்லை என்றாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, மின்துறை செயலா் அருண் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT