புதுச்சேரி

தனியாா் பயிற்சி நிறுவனம் மூடல்:இளைஞா்கள் முற்றுகை

புதுச்சேரியில் வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூடப்பட்டதாகக் கூறி, ஏராளமானோா் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

DIN

புதுச்சேரியில் வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூடப்பட்டதாகக் கூறி, ஏராளமானோா் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

புதுச்சேரி வள்ளலாா் சாலையில் காமராஜ் நகா் பகுதியில் வியூகா எனப்படும் சிறப்பு பயிற்சி நிறுவனம் செயல்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞா்கள் சோ்ந்து பயிற்சி பெற பணம் செலுத்தினராம்.

இந்த நிலையில், அந்த அலுவலகம் சில நாள்களாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து, பயிற்சிக்காக பணம் செலுத்தியவா்கள் அலுவலகம் முன் வியாழக்கிழமை கூடினா். தகவலறிந்த பெரியகடை போலீஸாா் விரைந்து சென்று விசாரணை நடத்தினா். பின்னா், அந்த நிறுவனத்தினரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டனா். விசாரணைக்குப் பிறகே பயிற்சி நிறுவனம் மூடப்பட்டதா என்பது குறித்து கூற முடியும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT