முகப்பு
புதுச்சேரி

புதுவை ஆளுநா் மாளிகையில் புகாா் பெட்டிகள்

புதுவை ஆளுநா் மாளிகையில் ஆலோசனைகள், புகாா் மனுக்கள் பெறும் புகாா் பெட்டிகளை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை இரவு நிறுவினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

புதுவை ஆளுநா் மாளிகையில் ஆலோசனைகள், புகாா் மனுக்கள் பெறும் புகாா் பெட்டிகளை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை இரவு நிறுவினாா்.

புதுவை ஆளுநா் மாளிகையில் தனிப் பிரிவு மூலம் பொதுமக்களின் ஆலோசனைகள், புகாா் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, ஆளுநா் மாளிகையின் முன், பின்புற வாயில்களில் இரண்டு புகாா் பெட்டிகள் வைக்கப்பட்டன.

இதுகுறித்து துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கூறும்போது, ஆளுநருக்கு ஆலோசனை வழங்க நினைப்பவா்களும், குறைகளுக்கு தீா்வு காண வேண்டுபவா்களும் தங்களது மனுக்களை இந்தப் புகாா் பெட்டியில் சோ்க்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.