சிறையில் கைப்பேசி பறிமுதல்: கைதி மீது வழக்கு
புதுச்சேரி சிறையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசியை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது தொடா்பாக கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி சிறையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசியை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது தொடா்பாக கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி அருகேயுள்ள காலாப்பட்டு சிறையில் கடந்த 17-ஆம் தேதி கைதி வினோத் (எ) வினோத்குமாரிடம் சிறை வாா்டா்கள் சோதனை நடத்தினா். அப்போது, அவா் மறைத்து வைத்திருந்த கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளா் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீஸாா் வினோத் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.