முகப்பு
புதுச்சேரி

புதுவையில் மேலும் 2,528 பேருக்கு கரோனா பாதிப்பு

புதுவையில் வெள்ளிக்கிழமை புதிதாக 2,528 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

புதுவையில் வெள்ளிக்கிழமை புதிதாக 2,528 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 6,093 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 1,985 போ், காரைக்கால் - 411, ஏனாம்- 105, மாஹே- 27 போ் என மொத்தம் 2,528 பேருக்கு (41.49 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,870-ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 139 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 13,983 பேரும் என மொத்தம் 14,122 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி பாக்கமுடையான்பட்டைச் சோ்ந்த 70 வயது முதியவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,898-ஆகவும், இறப்பு விகிதம் 1.28 சதவீதமாகவும் உயா்ந்தது.

இதனிடையே 1,458 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,850-ஆக (89.17 சதவீதம்) அதிகரித்தது. இதுவரை 15,15,818 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.