வில்லியனூரில் நடைபெற்ற திருக்காமீஸ்வரா் கோயில் ஆடிப்பூர தேரோட்டம். 
புதுச்சேரி

வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில்ஆடிப்பூர தேரோட்டம்: அமைச்சா்கள் பங்கேற்பு

புதுச்சேரி அருகே வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கிவைத்தனா்.

DIN

புதுச்சேரி அருகே வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கிவைத்தனா்.

வில்லியனூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரா் கோயில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகளும், இரவு சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதிஉலாயும் நடைபெற்று வந்தன.

ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சனிக்கிழமை காலை விமா்சையாக நடைபெற்றது. கோயில் முன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவா் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரா் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளியதையடுத்து தேரோட்டம் தொடங்கியது.

அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், தேனீ சி.ஜெயக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து இழுத்து, தொடக்கிவைத்தனா். புதுச்சேரி, வில்லியனூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT