புதுச்சேரி

புதுவைக்கு ஜூலை 2-ல் வருகிறார் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஜூலை 2-ம் தேதி புதுச்சேரி வருகிறார்.

DIN

புதுச்சேரி: குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஜூலை 2-ம் தேதி புதுச்சேரி வருகிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த  திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஸ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.  

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு, வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த வகையில், புதுவை மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக அவர் புதுச்சேரிக்கு வருகிறார்.

வரும் ஜூலை 2-ம் தேதி காலை புதுச்சேரிக்கு வருகை தந்து, கூட்டணித் தலைவர்களிடம் ஆதரவு திரட்ட உள்ளார். புதுச்சேரி தனியார் சொகுசு உணவகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்று, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக தலைவர்கள் சந்தித்து ஆதரவு திட்ட உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக பாஜக புதுவை மாநில தலைவர் சாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

Hollywoodஐக் கலக்கிய புதுவை Director! M Night Shyamalan! | Dinamani Talkies | Sixth Sense | Split

இது ஞாயிறு மனநிலை.. அங்கனா ராய்!

தென்காசி, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT