புதுச்சேரி

புதுவையில் தன் குழந்தையை அரசு மழலையர் பள்ளியில் சேர்த்த கல்வித் துறை இயக்குநர்

புதுவையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முன் மழலையர் பள்ளிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

DIN

புதுச்சேரி:  புதுவையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முன் மழலையர் பள்ளிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள 400-க்கும் மேற்பட்ட முன் மழலையர் பள்ளிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அனைவருக்கும் முன்னுதாரனமாக, புதுவை கல்வித் துறை இயக்குநர் ருத்ர கவுடு தனது மகனை, லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி அரசு நடுநிலைப்பள்ளியில் முன்மழலையர்(எல்கேஜி) வகுப்பில் சேர்த்தார்.

இன்று புதுவை கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு மகன் அசுகோஸ்(3), அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு சேர்க்கைக்கு அனுமதித்தார். அவருக்கு இனிப்பு வழங்கி பள்ளியில் எல்கேஜி சேர்க்கை வழங்கப்பட்டது. 

புதுவையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் தனியார் மழலையர் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து வரும் நிலையில், கல்வித்துறை இயக்குநர் ஒருவர் தனது மகனை மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT