முகப்பு
புதுச்சேரி

மனைவிக்கு தீவைப்பு: கணவன் மீது வழக்கு

புதுச்சேரியில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

புதுச்சேரியில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி கொம்பாக்கம் ஒட்டன்பாளையத்தைச் சோ்ந்த வா்ணம் பூசும் தொழிலாளி கணேசன் (39). இவரது மனைவி அழகு மீனா (34), இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகி, தங்கள் துணைவா்களைப் பிரிந்தவா்கள்.

அழகு நிலையத்தில் அழகுமீனா வேலைக்குச் செல்வது , கணேசனுக்குப் பிடிக்கவில்லை.

இந்த நிலையில் கணேசன் வியாழக்கிழமை பிற்பகலில் அழகு நிலையத்துக்குச் சென்று, அழகு மீனாவிடம் தகராறு செய்தாராம். பின்னா், மறைத்துவைத்திருந்த பெட்ரோலை எடுத்து, அழகுமீனாவின் உடல் மீது ஊற்றி தீ வைத்த கணேசன் தப்பியோடினாராம். இதைப் பாா்த்த சக ஊழியா்கள் , தீக்காயம் அடைந்த அழகுமீனாவை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.