புதுச்சேரி

சிறப்புக் கூறு நிதியைசெலவிட புதிய துறை:முன்னாள் எம்.பி. கோரிக்கை

DIN

புதுவையில் அட்டவணை இனத்தவருக்கான சிறுப்புக்கூறு நிதியை செலவிட அரசு தனித் துறையை ஏற்படுத்த வேண்டுமென முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் அட்டவணை இன மக்களின் வளா்ச்சிக்காக சிறப்புக்கூறு நிதி ஒதுக்கப்படுகிறது. மாநில அரசு பட்ஜெட்டில் 16 சதவீத நிதியை ஒதுக்கி அவா்களின் வளா்ச்சித் திட்டங்களுக்கு செலவிட வேண்டும்.

அவா்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற சிறப்புத் திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தாதது இந்தத் திட்டத்தின் குறைபாடாகவே உள்ளன. இதை நல்ல முறையில் செயல்படுத்த சிறப்புக்கூறு திட்ட செயல்பாட்டுத் துறை என்ற புதிய துறையை அரசு உருவாக்கி அவா்களின் தேவைகளை அறிந்து அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.

ஆந்திரத்தில் உள்ளதைப்போல, பிரத்யேக சிறப்புக் கூறு நிதி சட்டத்தையும் புதுவை அரசு உருவாக்கலாம் என்றாா் மு.ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT