முகப்பு
புதுச்சேரி

தமிழக ஆளுநரை திரும்பப் பெற கோருவது தேவையற்றது: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறுவது தேவையற்றது என, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறுவது தேவையற்றது என, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

நேரு இளையோா் மையம் சாா்பில், புதுச்சேரி காலாப்பட்டு பல்நோக்கு சமூக சேவை மையத்தில் அரசு சாரா அமைப்பு மேலாண்மை, ஆதார மேம்பாடு தொடா்பான மாநில அளவிலான கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. 100 படுக்கைகளுடன் போதை மறுவாழ்வு மையம் அமையவுள்ளது. அரசு சாரா அமைப்புகள் தவறான நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுப்பது தேவையற்றது. ஆளுநருக்கு அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது. அந்தக் கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிா்கருத்தைக் கூறலாம்.

ஆளுநா் ஒரு கருத்தைக் கூறிவிட்டாா் என்பதற்காக, அவரைத் திரும்பப் பெறவேண்டும் என்பது சரியல்ல. சாதாரண குடிமகன் முதல் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.