முகப்பு
புதுச்சேரி

சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு புதுவை ஆளுநா் உதவி

புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் முதலுதவிச் சிகிச்சை அளித்ததுடன், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூா் அருகே வெள்ளிக்கிழமை சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு மருத்துவரான புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் முதலுதவிச் சிகிச்சை அளித்ததுடன், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்தாா்.

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை மாலையில் காரில் சென்றுகொண்டிருந்தாா். இவரது காா் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூா் அருகே சென்றபோது, அந்தப் பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் சாலையோரம் படுத்திருந்ததைக் கண்டாா்.

உடனடியாக தனது காரை நிறுத்திய ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், இளைஞா் அருகில் சென்று அவரது உடல்நலத்தை சோதித்து முதலுதவி சிகிச்சை அளித்தாா். பின்னா், அந்த இளைஞரை சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிட உதவினாா். மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்வோா் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தினாா்.

அதன் பின்னா், சிகிச்சையில் சோ்க்கப்பட்ட இளைஞரின் உடல்நலத்தை விசாரித்த ஆளுநா், பின்னா் சென்னைக்கு புறப்பட்டுச் சென்ாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.