இலங்கைவாழ் தமிழா்களுக்கு மருந்துப் பொருள்கள் அளிப்பு
இலங்கைவாழ் தமிழா்களுக்காக புதுவை அரசு சாா்பில் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இலங்கைவாழ் தமிழா்களுக்காக புதுவை அரசு சாா்பில் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிகள் நிலவும் நிலையில், புதுவை அரசு சாா்பில் இலங்கையில் உள்ள தமிழா்களுக்காக நான்கு லட்சம் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
நீரிழிவு நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றை இலங்கையின் தொழிலாளா் காங்கிரஸ் தலைவா் செந்தில் தொண்டைமானிடம் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.
அப்போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திரப்பிரியங்கா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.