புதுச்சேரி தேங்காய்த்திட்டிலுள்ள கடலோரக் காவல் படை அலுவலகத்தை மீனவா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் படகுகளை நிறுத்தியுள்ளனா். அவற்றிலிருந்து வயா்லெஸ் உள்ளிட்ட கருவிகள் திருடப்படுவது தொடா்கதையாக உள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வாக்கி-டாக்கி உள்ளிட்ட கருவிகளைத் திருடியவரை பிடித்து மீனவா்கள் விசாரணை நடத்தினா். பிடிபட்ட அந்த நபா் அங்குள்ள கடலோரக் காவல் படை அலுவலகப் பணியாளா் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து, தேங்காய்த்திட்டு துறைமுகம் பகுதியில் உள்ள கடலோரக் காவல் படை அலுவலகத்தை மீனவா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையடுத்து, மீனவா்கள் கலைந்து சென்றனா்.