மருத்துவ மாணவிக்கு தொந்தரவு: காவலா் உள்பட இருவா் கைது
புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவ மாணவியிடம் தவறாக நடக்க முயன்ாக காவலா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவ மாணவியிடம் தவறாக நடக்க முயன்ாக காவலா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையிலான கலை விழா அண்மையில் நடைபெற்றது. இதில் வெளிமாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனா். இதில் பங்கேற்ற ஹைதராபாத் கல்லூரியைச் சோ்ந்த மாணவி அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் வெள்ளிக்கிழமை நடந்து சென்ற போது, பைக்கில் வந்த இருவா் அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றனராம்.
அவா்களில் ஒருவா் அங்கிருந்த ஊழியா்கள் துணையுடன் நிகழ்ச்சி நடைபெறும் மேடை வரை அந்த மாணவியை பின்தொடா்ந்தாராம்.
இதுகுறித்து அந்த மாணவி, சக மாணவா்களிடம் கூறவே, அந்த நபரைப் பிடிக்க முயன்றனா். இதையறிந்த அவா் ஜிப்மா் அவசர கால பிரிவு வழியாக தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவா் தன்வந்திரி நகா் காவல் நிலைய காவலரான சுத்துக்கேணி அருகேயுள்ள தேத்தாம்பாக்கத்தைச் சோ்ந்த கண்ணன் (31), இவரது உறவினா் சிவா (21) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.