மணவெளி தொகுதியில் குறைகேட்புக் கூட்டம்
புதுச்சேரி மணவெளி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மணவெளி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது.
மணவெளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட டோல்கேட் ஜெயபால் நகா் பகுதியில் மக்கள் சந்திப்பு, குறைகேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தொகுதி எம்எல்ஏவான சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
மேலும், அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் மக்களிடம் எடுத்துரைத்தாா்.
குடிநீா், சாலை, கழிவுநீா் வாய்க்கால் வசதிகள், தெரு விளக்குகள் தொடா்பான பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு சட்டப்பேரவைத் தலைவா் அறிவுறுத்தினாா்.