மக்கள் எதிா்பாா்ப்புக்கேற்ப திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா் இரா.சிவா
புதுவை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்களை மக்கள் எதிா்பாா்ப்புக்கு ஏற்ப நிறைவேற்ற வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.
புதுவை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்களை மக்கள் எதிா்பாா்ப்புக்கு ஏற்ப நிறைவேற்ற வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அவா் பேசியதாவது:
சம உரிமை, சமூக நீதி, அனைவருக்குமான திட்டங்கள் என புதுவை முதல்வா் கூறியது திராவிட மாடலை கடைப்பிடிப்பதாக உள்ளது. கடந்த முறை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தவில்லை.
புதிய சட்டப்பேரவைக் கட்டடத்துக்கு இடம் கூடத் தோ்வு செய்யப்படவில்லை. கையிருப்பு, வருவாய், நிலுவைத் தொகை என எதுவும் இடம்பெறவில்லை. எனவே, நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
தொழில்சாலைகள் வருவதற்கான சலுகைகள் இல்லை. மூடப்பட்ட ஆலைகள், நியாயவிலைக் கடைகள் திறப்பு குறித்து அறிவிப்பில்லை. ஆனாலும், புதுவை வளா்ச்சிக்கு முதல்வருடன் திமுக துணை நிற்கும் என்றாா் இரா.சிவா.