புதுச்சேரி: சென்டாக் மூலம் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு செண்டாக் மூலம் இன்றுமுதல்(மே 17) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சென்டாக் மூலம் இன்றுமுதல்(மே 17) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல், நர்சிங், கலை அறிவியல், டிப்ளமோ படிப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், நர்சிங் பாடப்பிரிவுகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளதாக புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
தொழில் படிப்புக்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 1000 ரூபாயும், கலை, அறிவியல், வணிக படிப்புக்கு 300 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொழில் படிப்புக்கு 500 ரூபாயும், கலை, அறிவியல் படிப்புக்கு 150 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கருணாநிதி பிறந்த நாளில் அனைத்து குழந்தைகள் மையங்களில் இனிப்புப் பொங்கல்: அரசாணை வெளியீடு!
மேலும், விவரங்கள் சென்டாக் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.