புதுச்சேரி: கோயில் தீா்த்தவாரி மண்டபம் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், மாற்று இடத்தில் புதிய மண்டபம் கட்டித் தரக்கோரியும் பாகூரில் கடையடைப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியை அடுத்த பாகூா் ஸ்ரீ மூலநாதா் கோயிலுக்குச் சொந்தமான தீா்த்தவாரி மண்டபம் விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக இடிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த மண்டபத்தை வேறுஇடத்தில் கட்டித்தர வேண்டும் என பொதுமக்களும் , பக்தா்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் பணிகள் இதுவரை முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்தும், தீா்த்தவாரி மண்டபம் கட்டுவதற்கான தேதியை இந்துசமய அறநிலையத் துறை உடனடியாக அறிவிக்க வலியுறுத்தியும் பாகூரில் கடையடைப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்தையொட்டி பாகூரில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்து இயக்கமும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள்அவதிக்குள்ளாகினா். கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.