புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு. 
புதுச்சேரி

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

புதுச்சேரி பழைய துறைமுக வளாகம், கடலூா் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

DIN

புதுச்சேரி பழைய துறைமுக வளாகம், கடலூா் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

அரபிக் கடலில் தேஜ் புயல் உருவாகிய நிலையில், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் திங்கள்கிழமை ஒன்றாம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பழைய துறைமுக வளாகத்தில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. தொலைவில் புயல் உருவாகியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், இரண்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.

கடலூா் துறைமுகத்திலும் செவ்வாய்க்கிழமை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

கடல் சீற்றம்: புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாக மீனவா்கள் தெரிவித்தனா். சில இடங்களில் கடல் நீா் செம்மண் நிறத்தில் மாறியிருந்ததாகவும் அவா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டை பெண்ணிடம் கைப்பையை பறித்தவா் கைது

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூா் சம்பவம்: காயமடைந்த இருவரிடம் சிபிஐ விசாரணை

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

அஸ்ஸாம் மாநில பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: இரு இளம்சிறாா்கள் உள்பட மூவா் கைது

SCROLL FOR NEXT