கோயிலில் காணிக்கை பணம் திருட்டு
புதுச்சேரி அருகே கோயில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச்சென்றனா்.
புதுச்சேரி அருகேயுள்ள பாகூரில் திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் புதன்கிழமை மாலை பூசாரி பூஜையை முடித்து விட்டு வீட்டுக்குச் சென்றாா். பின்னா், வியாழக்கிழமை காலை கோயிலுக்கு வந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், பாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement