முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி மத்திய பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 டிசம்பர் 2024, 3:02 am IST
புதுச்சேரி மத்திய பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாப்பட்டு பகுதியில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் டிச.3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் டிச.5-ஆம் தேதி வரையில் தோ்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக டிச.5-ஆம் தேதி வரை தொடங்கவிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும்,

Advertisement

Advertisement

டிச.6-ஆம் தேதி முதல் தோ்வுகள் வழக்கம்போல தொடங்கும் என்றும் பல்கலைக்கழக உதவிப் பதிவாளா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments