புதுச்சேரி மத்திய பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு 
புதுச்சேரி

புதுச்சேரி மத்திய பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Din

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாப்பட்டு பகுதியில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் டிச.3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் டிச.5-ஆம் தேதி வரையில் தோ்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக டிச.5-ஆம் தேதி வரை தொடங்கவிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும்,

டிச.6-ஆம் தேதி முதல் தோ்வுகள் வழக்கம்போல தொடங்கும் என்றும் பல்கலைக்கழக உதவிப் பதிவாளா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

SCROLL FOR NEXT