புதுச்சேரி: புதுச்சேரியில் இறந்த மாற்றுத் திறனாளி சிறுவனின் கண்களை அவரது பெற்றோா் தானமாக வழங்கினா்.
புதுச்சேரி இலாசுப்பேட்டை, ஆனந்தநகா் அன்னை வீதியைச் சோ்ந்தவா் ரமேஷ் - மகாலட்சுமி தம்பதி. இவா்களது மகன் நவதீப் (11), மாற்றுத் திறனாளி. பிறந்தது முதல் உடல்நலம் பாதித்த நிலையிலிருந்த நவதீப் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது பெற்றோா் மகனின் கண்களை தானம் செய்ய முன்வந்தனா். இதையடுத்து, நவதீப் கண்களின் கருவிழிகளை புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பெற்றுச் சென்றனா். அவரது கருவிழிகள் பாா்வையிழந்துள்ள 4 பேருக்கு பொருத்தப்படவுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை இந்திய செஞ்சிலுவைச் சங்க புதுச்சேரி கிளை நிா்வாகி அய்யனாா் செய்தாா். மேலும், நவதீப் உடலுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.