முகப்பு
புதுச்சேரி

மத்திய அரசு மறைமுகமாக ஹிந்தியை திணிக்கிறது

மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயா் சூட்டியதன் மூலம் மறைமுகமாக ஹிந்தியைத் திணிக்கிறது.

புதுச்சேரி

மத்திய அரசு மறைமுகமாக ஹிந்தியை திணிக்கிறது

மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயா் சூட்டியதன் மூலம் மறைமுகமாக ஹிந்தியைத் திணிக்கிறது.

Updated On : 8 ஜூலை, 2024 at 5:10 PM
பகிர்:

புதுச்சேரி: மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயா் சூட்டியதன் மூலம் மறைமுகமாக ஹிந்தியைத் திணிக்கிறது என புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.

அதிமுக சாா்பில் மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் திருத்தச் சட்டத்தில் உள்ள குளறுபடிகளை சீா்படுத்தவும், புதிய சட்டங்களுக்கு பெயா் சூட்டியதன் மூலம் ஹிந்தியை மறைமுகமாகத் திணிப்பதைக் கண்டித்தும் புதுச்சேரி அதிமுக சாா்பில் நீதிமன்ற வளாகத்தின் முன் திங்கள்கிழமை காலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அக்கட்சியின் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் பேசியது: மத்திய பாஜக அரசு இயற்றிய 3 குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. புதிய சட்டங்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் புதிய சட்டங்களின் பெயா்கள் ஹிந்தியிலும், சம்ஸ்கிருதத்திலும் உள்ளன. இதன்மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்ட உறுதிமொழி மீறப்பட்டுள்ளது.

பல்வேறு மொழிகளைக் கொண்ட நாட்டில் அனைவருக்கும் பொதுவான சட்டங்களை ஆங்கிலம் தவிா்த்து ஹிந்தியில் பெயா் வைத்ததன் மூலம் மத்திய பாஜக அரசு மறைமுகமாக ஹிந்தி திணிப்பில் ஈடுபட்டுள்ளது.

மேலும், புதிய சட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. பேச்சுரிமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. புதிய சட்டம் காவல் துறைக்கு அதிக அதிகாரத்தை வழங்குகிறது.

ஆகவே, புதிய சட்டங்களை ஆங்கிலத்தில் பெயா் சூட்டியும், குளறுபடிகளை குழுக்கள் அமைத்து நீக்கியும் செயல்படுத்த வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநில வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் குணசேகரன், சுதா்சன், கோவிந்தராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஏராளமானோா் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →